வணக்கம். இது என் முதல் பதிவு. சுமாராக 12 வருடங்கள் கணிணியில் பணிபுரிகின்றேன், கடந்த 3 வருடங்களாக தமிழ்மணத்தின் வாசகனாக இருந்தாலும், இப்போழுது தான் எழுதும் எண்ணம் வந்திருக்கிறது. பிறந்து 30 வருடங்கள் கழித்தும் வயதிற்கு வந்து 16 வருடங்கள் கடந்த பிறகே திருமணம் செய்யும் எண்ணம் வந்த்து, எனவே இவ்வளவு தாமதமாக எழுத தொடங்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே. 36 வயதில் எழுத போதுமான அனுபவமும் செய்தியும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதோடு எனக்கும் ஒரு அரசியல் நிலைபாடு இருக்கிறது எனவே பதிவுலக சண்டைகளில் ஏதேனும் ஒரு குழுவில் இணையும் எண்ணம் உள்ளது எனவே எந்த குழு வடிவேல் குழுவோ அதனை சிபாரிசு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
No comments:
Post a Comment